search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் 2 தொழிலாளிகள் பலி
    X

    பைக் விபத்தில் 2 தொழிலாளிகள் பலி

    • பழுதாகி நின்ற டிராக்டரில் மோதியது
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாந்தோனி மற்றும் பாலமுருகன் இவர்கள் இருவரும் கட்டிட வேலையில் சென்டிரிங் அமைக்கும் பணி செய்து வருகின்றனர்.

    இருவரும் செங்காடு கிராமத்தில் சென்ட்ரிங் வேலைக்கு நேற்று காலை சென்றனர். பின்னர் பணி முடித்து விட்டு மாலையில் கீழ்குவளைவேடு அருகே பைக்கில் வந்த கொண்டிரு ந்தனர். அப்போது சாலை ஓரத்தில் பழு தாகி டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்து. டிராக்டர் ஒன்றே நின்று கொண்டி ருந்ததை அறியாமல் டிராக்டரின் பின்னால் திடீரென எதிர்பாராத விதமாக மோதி உள்ளனர்.

    இதனால் தலையில் பலத்த காயமடைந்த ரத்த வெள்ளத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வந்தவாசி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது‌.

    Next Story
    ×