search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
    X

    10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

    • தாய் கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே அன்மருதை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரி இளங்கோ ஜோதி தம்பதியினருக்கு திவாகர் (வயது 15) என்ற மகனும் ஹரிபிரியா என்ற மகளும் உள்ளனர்.

    திவாகர் அன்மருதை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செலவிற்கு திவாகர் வீட்டில் பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை திவாகரின் தாயாார் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த திவாகர் வீட்டில் பின்புறத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தான்.

    அக்கம் பக்கத்தினர் திவாகரனை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திவாகர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து பெரணமல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×