search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டுமனை பட்டா கேட்டு மனு
    X

    கோப்புபடம்

    வீட்டுமனை பட்டா கேட்டு மனு

    • அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி வாழ்ந்து வருகிறேன்.
    • நான் குடியிருக்கும் இடம் பழைய ஆவணங்களில் வண்டிப்பாதை என்று உள்ளது

    திருப்பூர்:

    திருப்பூர் கல்லம்பாளையத்தை சேர்ந்த பீட்டர் என்பவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கல்லம்பாளையம் ரெயில்வே லைன் அருகே அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி வாழ்ந்து வருகிறேன்.

    நான் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனக்கு வேறு வீடோ,சொத்துக்களே இல்லை. நான் குடியிருக்கும் இடம் பழைய ஆவணங்களில் வண்டிப்பாதை என்று உள்ளது. அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நான் குடியிருக்கும் இடத்துக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×