என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி நடைபெற்றக் காட்சி.

    வெள்ளகோவிலில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

    • விழிப்புணர்வு பேரணி வெள்ளகோவில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு மற்றும் டெங்கு எதிர்ப்பு மாத கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி வெள்ளகோவில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    கருத்தரங்கில் ஆசிரியைகள், மாணவிகள் தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும்.

    சிறு குடும்ப நெறி, திருமணத்திற்கு ஏற்ற வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நல முறைகள், முதல் குழந்தைகளுக்கும் இரண்டாவது குழந்தைக்கும் தேவையான இடைவெளி, ஒருபெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்து கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் ஆரம்ப சுகாதார நிலைய புள்ளியல் அலுவலர் பெரியசாமி, சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன் மற்றும் விக்ரம் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×