என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
தொழிலாளி தற்கொலை
- நைலான் கயிறு மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
- செந்தில்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் கொசவம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் செந்தில்குமார் (வயது 43) . இவர் தனது தாயார் அங்காத்தாளுடன் வசித்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியே இருந்த அவர் விட்டத்தில் நைலான் கயிறு மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
வெளியே சென்று இருந்த அவரது தாயார் வீடு திரும்பிய போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு செந்தில்குமாரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து அங்காத்தாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story