search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4-வது குடிநீர்  திட்டத்தால் திருப்பூர் மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்க வாய்ப்பு
    X

    கோப்புபடம்

    4-வது குடிநீர் திட்டத்தால் திருப்பூர் மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்க வாய்ப்பு

    • வீட்டு இணைப்புகளில் குடிநீர் சப்ளையாகிறது
    • கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வடக்கு பகுதியில் வீட்டு இணைப்புகளில் குடிநீர் சப்ளையாகிறது. தெற்கு பகுதியில் கடந்த மாதம் 15ந் தேதி வெள்ளோட்டம் துவங்கியது. அதன்பின் பகுதி வாரியாக தொட்டிகளில் நிரப்பி சோதனை நடந்து வருகிறது. சில பகுதிகளில் வினியோக குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது எனவே 4-வது திட்ட குடிநீர் விரைவில் சப்ளை துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    குடிநீர் திட்டப்பகுதியிலிருந்து தற்போது 6 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. பகுதிவாரியாக பிரித்து தொட்டிகளில் ஏற்றப்படுகிறது. கட்டுமானம் நிறைவடையாத தொட்டி தவிர புதிதாக கட்டிய மற்றும் பயன்பாட்டில் உள்ள தொட்டிகளில் வெள்ளோட்டம் முடிந்து குடிநீர் சப்ளையாகிறது.தெற்கு பகுதியில் 3-வது பிரிவில் 12 தொட்டிகளில் 7, 4-வது பிரிவில் 22 தொட்டிகளில் 9 தொட்டிகளில் தற்போது வெள்ளோட்டம் நிறைவடைந்து சப்ளை துவங்கியுள்ளது.மீதமுள்ள கட்டுமானம் முடிந்த தொட்டிகள் அனைத்திலும் 15ந் தேதிக்குள் தண்ணீர் ஏற்றப்படும். வினோபா நகர் தொட்டி பகுதியில் நிலவிய தட்டுப்பாடு குறித்து ஆய்வு நடத்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 3 வது திட்டக்குடிநீர் நேரடியாக் செல்லும்படி மாற்றுத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அப்பகுதியில் இனி தட்டுப்பாடு வராது. இதற்கு முன் 15 நாள் என்ற அளவிலிருந்த குடிநீர் சப்ளை தற்போது 3 முதல் 5 நாள் என்ற அளவில் கொண்டு வரப்பட்டுள்ளது. சப்ளையில்லாத பகுதிகளில் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×