search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?
    X

    கோப்புபடம்.

    மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?

    • ஊராட்சிகளில் மார்ச் 22-ந் தேதி அன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடக்க உள்ளன.
    • உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    திருப்பூர் :

    தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மார்ச் 22-ந்தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடி க்கப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் மார்ச் 22-ந்தேதி அன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடக்க உள்ளன. இந்நாளில் தண்ணீருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாயமான மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மழை நீரை சேமிப்போம்,நிலத்தடி நீரை பாதுகாப்போம் என காலம் காலமாக கூறப்பட்டு தான் வருகிறது. ஆனால் எந்த ஆட்சி அமைந்தாலும் மழைநீர் சேகரிப்பு முறையாக செயல்படுத்த ப்படுவதில்லை. குடியிருப்புகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இக்கட்டமைப்பு இருந்தால் மட்டுமே உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமலேயே கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    நாடு முழுவதும் மழை நீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி மத்திய அரசு ஜல் சக்தி திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வந்தது.இதன்படி அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் ,பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் கட்டமைப்பு நிறுவ உத்தரவிடப்பட்டது. இக்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.

    இதன் பிறகு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கட்டமைப்புகள் அனைத்தும் மாயமாகிவிட்டன. இன்றைய சூழலில் போதிய பருவ மழை கிடைக்காவிட்டாலும், நிலத்தடி நீர்தான் மக்களுக்கு ஆதாரமாக உள்ளன.

    உரிய காலத்தில் கிடைக்கும் மழை நீரை சேமிக்காவிட்டால் வறட்சி காலங்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மழைநீர் சேமிப்பானது வெறும் விழிப்புணர்வுடன் நின்று விடாமல் இதை சட்டமாக இயற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம். உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடப்பதால் தண்ணீர் அவசியத்தை உணர்த்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு கட்டாயமா க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Next Story
    ×