என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுப்பாளையம் கிளைக்கால்வாயில் தண்ணீர் திறப்பு
- 7,219 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
- கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.
உடுமலை :
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், உடுமலை புதுப்பாளையம் கிளைக்கால்வாய் வாயிலாக 7,219 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.கால்வாயில் முதல் சுற்றுக்கு அக்டோபர் 28ல் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் சுற்று நிறைவு பெற்றது. இந்நிலையில் இரண்டாம் சுற்றுக்கு, பிரதான கால்வாயில் பூசாரிபட்டி ஷட்டர் வழியாக, புதுப்பாளையம் கிளைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது :- முதல் சுற்று தண்ணீர் திறப்பின் போது, தொடர் மழை பெய்தது. தற்போது மழை இடைவெளி விட்டுள்ளதால், கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.மேலும் போதிய இடைவெளி இல்லாமல், தண்ணீர் திறக்கப்படுவதால், மக்காச்சோள பயிர்கள் கதிர் பிடிக்கும் போது போதுமான தண்ணீர் வழங்கவும் அதிகாரிகள் திட்டமிட வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்