search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் வட்டார கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
    X

    வடுகபாளையம் புதூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பல்லடம் வட்டார கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

    • குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • சில ஊராட்சிகளில் சிறு, சிறு வாக்குவாதங்களுடன் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    பல்லடம்:

    77-வது சுதந்திரதினத்தினை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும்என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதன்படி பல்லடம் வட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளில், கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் புவனேஸ்வரி,அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் புனிதா சரவணன் தலைமையில் நடைபெற்றது. கரைப்புதூர் ஊராட்சியில் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

    இதேபோல செம்மிபாளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி தலைமையிலும், மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார் தலைமையிலும், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் தலைமையிலும், கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி.பழனிச்சாமி தலைமையிலும், மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம் தலைமையிலும், மல்லேகவுண்டம்பாளையத்தில் முத்துக்குமாரசுவாமி தலைமையிலும், பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன் தலைமையிலும், புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

    இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையம் ஊராட்சி கிராம சபை தலைவர் கவிதாமணி கலந்து கொள்ளாததாலும், ஊராட்சி மன்ற கணக்கு வழக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி,பணிக்கம்பட்டி ஊராட்சி, அனுப்பட்டி ஊராட்சி, உள்ளிட்டஊராட்சிகளில் சிறு, சிறு வாக்குவாதங்களுடன் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×