search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் அரிசி கடத்தல் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை
    X

    கோப்பு படம்.

    ரேஷன் அரிசி கடத்தல் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை

    • 18005995950 என்ற எண்ணில் பொதுமக்கள் இலவசமாக புகார் தெரிவிக்கலாம்.
    • புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    திருப்பூர்

    தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, இலவச எண்ணில் புகார் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 18005995950 என்ற எண்ணில் பொதுமக்கள் இலவசமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் திருப்பூர் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கரடிவாவி சோதனைச்சாவடி, உடுமலை பஸ் நிலையம், குடிமைப்பொருள் புலனாய்வு அலுவலகம் ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×