என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்
Byமாலை மலர்23 Sep 2023 7:31 AM GMT
- மாநகராட்சி பகுதியில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
- வரும்நாட்களில் நோய் பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
தீவிர நோய் பரவல் இல்லை என்ற நிலை இருந்தபோதிலும், வரும்நாட்களில் நோய் பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.டெங்கு காய்ச்சல் பரவும் தன்மை, ஏடிஎஸ்., கொசுப்புழு உருவாகும் இடம், ஏடிஎஸ்., கொசு உற்பத்தி சுழற்சி முறை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது.
கொசுப்புகை மருந்து அடிக்கும் பணி, கொசு உற்பத்தி தடுப்பு பணிக்கு அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X