search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் தண்ணீர்பந்தல் ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
    X

    கோப்புபடம்

    திருப்பூர் தண்ணீர்பந்தல் ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா

    • விழாவில் கணபதி ஹோமம், 108 தாமரை மகாலட்சுமி, 108 மூலிகை தன்வந்திரி ஆகியவை வைத்து ஹோம பூஜைகள் செய்யப்பட்டது.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார் ,கருப்பராயன், ஸ்ரீ ஆதிபராசக்தி ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முதலாம் ஆண்டு விழா நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்றது.

    விழாவில் கணபதி ஹோமம், 108 தாமரை மகாலட்சுமி, 108 மூலிகை தன்வந்திரி ஆகியவை வைத்து ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் மூலவர் மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை, பௌர்ணமி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×