என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
துணை தாசில்தாராக 7 பேருக்கு பதவி உயர்வு
- வருவாய் ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று 7 பேர் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவக்குமார் சாலை மேம்பாட்டு திட்ட தனிதாசில்தார் அலுவலக துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று 7 பேர் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி காங்கயம் தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த ஈஸ்வரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக ஈ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த பாலவிக்னேஷ் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக தலைமையிடத்துக்கு துணை தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவக்குமார் சாலை மேம்பாட்டு திட்ட தனிதாசில்தார் அலுவலக துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் அவினாசி மண்டல துணை தாசில்தாராக இருந்த சாந்தி மீண்டும் அதே இடத்திலும், திருப்பூர் மாநகராட்சி அலுவலக தேர்தல் துணை தாசில்தாராக இருந்த வசந்தா மீண்டும் அதே இடத்திலும், மடத்துக்குளம் தேர்தல் துணை தாசில்தாராக இருந்த வளர்மதி மீண்டும் அதே இடத்திலும், தாராபுரம் மண்டல துணை துணை தாசில்தாராக இருந்த மகேஸ்வரி மீண்டும் அதே இடத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.