என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- மதுரையில் நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
- புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்கள் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏவிடம் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கே என் விஜயகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கலந்துகொண்டு மதுரையில் நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு சுவர் விளம்பரம் எழுதுவது, வாகன வசதி ஏற்பாடு, மற்றும் திரளானோர் பங்கேற்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தின் போது திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை மணலூர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏவிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பகுதி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






