என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பின்னலாடை நிறுவன அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி வருகிற 2-ந் தேதி தொடங்குகிறது
    X

    கோப்புபடம்.

    பின்னலாடை நிறுவன அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி வருகிற 2-ந் தேதி தொடங்குகிறது

    • பின்னலாடை நிறுவனங்களுக்கிடையே நட்புறவை மேம்படுத்த ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது.
    • 15 ஓவருடன் லீக் சுற்று, 20 ஓவருடன் அரையிறுதி, இறுதி போட்டிகள் நடத்த ப்படுகிறது

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் தினமும் ஓய்வின்றி உழைக்கின்றனர். தொழில் வளர்ச்சிக்காக இரவு பகலாக பாடுபடும் தொழிலாள ர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையிலும் பின்னலாடை நிறுவனங்களு க்கிடையே நட்புறவை மேம்படுத்த நிப்ட்-டீ கல்லூரி ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. அவ்வகையில் 6-வது என்.பி.எல்., கிரிக்கெட் தொடர், வருகிற ஏப்ரல் 2-ந்தேதி துவங்குகிறது. நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் வாரந்தோ றும் ஞாயிற்றுக்கி ழமை போட்டிகள் நடை பெறும். 15 ஓவருடன் லீக் சுற்று , 20 ஓவருடன் அரையிறுதி, இறுதி போட்டிகள் நடத்த ப்படுகிறது. பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் மட்டுமே என்.பி.எல்., கிரிக்கெட்டில் பங்கேற்க முடியும். உள்நாட்டு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனம் என பின்னலாடை துறை சார்ந்த எந்தவகை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளரும் பங்கேற்கலாம்.

    தொழிலாளர் அல்லாத வேறுநபர்களை அணியில் சேர்க்க கூடாது. குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரிவ தற்கான அடையாள அட்டை,கடைசி மூன்று மாத சம்பள ரசீது, வீரரின் புகைப்படம், பணிபுரியும் நிறுவன நிர்வாக இயக்குனரின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு என்.பி.எல்., சுழற்கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

    பங்கேற்க விரும்பும் பின்னலாடை நிறுவன கிரிக்கெட் அணியினர் https://www.nifttea.ac.in/npl-2023 என்கிற தளத்தில் வருகிற 27-ந் தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு 95971 54111 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×