என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
உண்ணாவிரதம் போராட்டம் நடத்த திருச்சபை பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு
- கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் வழிபாடுகள் நடக்கும்போது ஒருசில அமைப்பினா் இடையூறு செய்கின்றனா்.
- திருச்சபை போதகா்கள் மற்றும் ஐக்கியங்களின் தலைவா்கள் கூட்டம் விஜயாபுரத்தில் உள்ள திருச்சபையில் நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட திருச்சபை பாதுகாப்பு கூட்டமைப்பின் சாா்பில் அனைத்து திருச்சபை போதகா்கள் மற்றும் ஐக்கியங்களின் தலைவா்கள் கூட்டம் விஜயாபுரத்தில் உள்ள திருச்சபையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருப்பூரில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் வழிபாடுகள் நடக்கும்போது ஒருசில அமைப்பினா் இடையூறு செய்கின்றனா். இது கண்டிக்கத்தக்கதாகும். இதே போன்ற சம்பவங்கள் தொடா்ந்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருச்சபை போதகா்களும், கிறிஸ்தவ மக்களும் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






