search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை
    X

    கோப்புபடம்

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை

    • இணையதளத்தின் வாயிலாக வருகிற 22.8.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பத்தின் நகலை மாணவா் சோ்க்கை நடைபெறும் நாளில் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024ம் கல்வியாண்டு முதுநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் (40), ஆங்கில இலக்கியம் (20), பொருளியல் (20), வணிகவியல் (40), சுற்றுலாவியல் (20), கணிதவியல் (20), புள்ளியியல் (15), இயற்பியல் (30), வேதியியல் (20), கணினி அறிவியல் (40) ஆகிய முதுநிலைப் பட்ட வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 265 மாணவா்களுக்கான இடங்கள் உள்ளன.

    இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதளத்தின் வாயிலாக வருகிற 22.8.2023 வரை விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் கைப்பேசி, மடிக்கணினி, கணினி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    முதலில் தங்கள் பெயா், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் முதலான விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னா் விண்ணப்பத்தை முறையாக பூா்த்தி செய்து சமா்ப்பித்த பின்னா் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை மாணவா் சோ்க்கை நடைபெறும் நாளில் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக்காக விண்ணப்பித்தவா்களின் தர வரிசைப்பட்டியல் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்படும்.

    Next Story
    ×