search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.வி.பி. கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
    X

     வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.

    ஏ.வி.பி. கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

    • 7-ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடந்தது.
    • ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கோகோ, கைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் வளையாடினார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 7-ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை ஆகிய அணிகளாக பிரிக்கப்பட்டு 100, 400, 800, 1500 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கோகோ, கைப்பந்து, சதுரங்கம், கேரம் போன்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் விைளயாடினார்–கள்.

    நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தலைவர் ஏ.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.லீலாவதி வரவேற்றார். 2022-23-ம் ஆண்டுக்கான விைளயாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. விழாவில் திருப்பூர் போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பாரத்டையிங் நிர்வாக இயக்குனர் பி.முருகநாதன் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். இதில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை மஞ்சள் அணி வென்றது. அதைத்தொடர்ந்து மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சியாக சிலம்பம், டேக்வாண்டோ, யோகா நடைபெற்றது. கல்லூரி நிர்வாக அலுவலர் எஸ்.அசோக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×