search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூர் - ஊத்துக்குளி பகுதியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
    X

    பெருமாநல்லூர் மின் அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். 

    பெருமாநல்லூர் - ஊத்துக்குளி பகுதியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மின் அலுவலகத்தில் நடைபெறும்.
    • தமிழக அரசு ஆதார் எண் இணைக்கும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

    பெருமாநல்லூர் :

    தமிழக மின் வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்களில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.

    இம்முகாம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மின் அலுவலகத்தில் நடைபெறும். தற்போது தமிழக அரசு ஆதார் எண் இணைக்கும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×