என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அடையாள அட்டை கேட்டு சாலையோர வியாபாரிகள் மனு
- ஏ. ஐ. டி. யு. சி., சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
- சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது
அவினாசி:
திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை அவினாசி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வழங்கி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி மற்றும் அவினாசி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம் ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதேபோல் அவினாசி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடமும் அவினாசி சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஏ. ஐ. டி. யு. சி., சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கலந்துகொண்டனர்.மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி நிர்வாகத்தினர், சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையினரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்