search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் குடிநீர் ஆப்ரேட்டர்களுக்கு புத்தாக்க பயிற்சி
    X

    பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட காட்சி.

    வெள்ளகோவிலில் குடிநீர் ஆப்ரேட்டர்களுக்கு புத்தாக்க பயிற்சி

    • நீர் நிலைகள் சுத்திகரிப்பு மற்றும் குளோரினேசன் செய்தல் பற்றிய புத்தாக்க பயிற்சி வழங்கினார்.
    • குடிநீரை முறையாக கையாள்வதால் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை கூட கட்டுப்படுத்தலாம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நேற்று வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் நிலைகள் இயக்குபவர்களுக்கு, குடிநீர் நிலைகள் சுத்திகரிப்பு மற்றும் குளோரினேசன் செய்தல் பற்றிய புத்தாக்க பயிற்சி வழங்கினார்.

    இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட சுகாதார நலக்கல்வியாளர் ஆர். ராஜ்குமார், மாவட்ட புகையிலை தடுப்பு சமூக சேவகர் வி.பிரவீன்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எம்.ராஜேந்திரன், வட்டார சுகாதார புள்ளியியலாளர் டி.பெரியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.கதிரவன், என்.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வின் போது போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் கையிருப்பு வைத்திருப்பது, அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஒவ்வொரு முறை தண்ணீர் திறந்து விடும் பொழுதும் சரியான அளவில் குளோரின் சேர்ப்பது மற்றும் 15 நாட்களுக்கு ஒருமுறை மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்தல் போன்றவை உறுதி செய்வதால் நீரினால் பரவும் நோய்களான காலரா, சீதபேதி, வாந்தி, வயிற்றுபோக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை கட்டுபடுத்த முடியும் மற்றும் குடிநீரை முறையாக கையாள்வதால் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை கூட கட்டுப்படுத்தலாம் என்று வட்டார மருத்துவ அலுவலர் டி. ராஜலட்சுமி எடுத்து கூறினார்.

    Next Story
    ×