என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் - தி.மு.க., வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    X

    பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் - தி.மு.க., வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

    • பேராசிரியரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கியும், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும்.
    • பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். மாவட்ட, மாநகர, ஒன்றிய, செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளான வருகிற 19-ந்தேதி மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகில் பேராசிரியரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கியும், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும்.

    வருகிற 16-ந்தேதி திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில், இலக்கிய அணி செயலாளர் வி.பி.கலைராஜன், தலைமை கழக சொற்பொழிவாளர் புகாரி ஆகியோர் பேசுகிறார்கள். பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×