search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையையொட்டி கோழி விலை உயர வாய்ப்பு
    X
    கோப்புபடம்

    தீபாவளி பண்டிகையையொட்டி கோழி விலை உயர வாய்ப்பு

    • கடந்த மாதம் புரட்டாசி விரதம் துவங்கியதால் பலர் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர்
    • பண்ணைகளில் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கோழி 350 ரூபாயாக சரிந்தது.

    திருப்பூர் :

    கடந்த மாதம் புரட்டாசி விரதம் துவங்கியதால் பலர் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர். எனவே கோழி விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. பண்ணைகளில் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கோழி 350 ரூபாயாக சரிந்தது.குறைந்த விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டினர். இதனால், கோழிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. தற்போது புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இதனால் பலரும் அசைவம் சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.தீபாவளி பண்டிகையையொட்டி பலரது வீடுகளில் உறவினர்களை அழைத்து அசைவ விருந்து வைப்பர். இதனால் கோழி விலை உயர வாய்ப்புள்ளது.

    Next Story
    ×