search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
    X

    போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    உடுமலையில் காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்

    • ரூ .3 ஆயிரம் வழங்குவதற்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.
    • ஓய்வூதிய தொகை வழங்கக்கோரி போராட்டம்

    உடுமலை :

    ஓய்வூதியம் பெறுகிறவர்களுக்கு ஓய்வூதிய தொகையாக மாதம் ரூ .3 ஆயிரம் வழங்குவதற்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.

    அதன்படி ஓய்வூதிய தொகை வழங்கக்கோரி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடுமலையில் மகாத்மா காந்தி சிலையிடம் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் ஓய்வூதிய நல சங்கத்தின் சார்பில் உடுமலை குட்டை திடலில் நடந்தது. சங்கத் தலைவர் எல்ஐசி. வேலாயுதம் தலைமை வகித்தார் .செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நகராட்சி துணைத்தலைவரான கலைராஜன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×