search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டுமனை பட்டா கேட்டு மனு
    X

    கோப்புபடம்

    வீட்டுமனை பட்டா கேட்டு மனு

    • கடந்த 30 ஆண்டுகளாக அந்த இடத்தில் வீடு கட்டி மின்சார வசதி பெற்று குடியிருந்து வருகிறேன்.
    • அரசுக்கு வீட்டு வரி, குடிநீர் செலுத்தி வருகிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டு கல்லம்பாளையத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் திருப்பூர் வடக்கு தாலுகா தாசில்தாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் குடியிருந்து வரும் இடம் மாநகராட்சிக்கு உரிய வண்டிப்பாதை என பதிவேடுகளில் உள்ளது.

    நான் கடந்த 30 ஆண்டுகளாக அந்த இடத்தில் வீடு கட்டி மின்சார வசதி பெற்று குடியிருந்து வருகிறேன். அரசுக்கு வீட்டு வரி, குடிநீர் செலுத்தி வருகிறேன். ஆகவே எனக்கு பழைய கிராம பதிவேடுகளில் உள்ளதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எனது வறுமை நிலையை கருத்தில் கொண்டு அந்த இடத்துக்கு பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×