search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூளை நோயால் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
    X

    கோப்புபடம்

    மூளை நோயால் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

    • இவருக்கு மனைவியும் இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
    • விக்னேசுக்கு திடீரென மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது.

    உடுமலை:

    உடுமலை பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32).இவர் சென்னையில் தங்கியிருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும் இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. விக்னேசுக்கு திடீரென மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் டாக்டர்கள் மூலமாக தானமாக பெறப்பட்டது.

    Next Story
    ×