search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 450 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
    X

    கோப்புபடம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 450 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

    • தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
    • மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் தூய்மை செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கிறார்கள்.

    இதற்காக திருப்பூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்ட பஸ்கள் அனைத்தும் தாராபுரம் ரோடு , கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், சிவகங்கை, சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் மார்க்கமாக 250-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பஸ் நிலையத்துக்குள் கட்டுமான பணி நடப்பதால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

    இதற்காக பஸ் நிலையத்துக்கு மேற்கு பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் தூய்மை செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருப்பூரில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு 450 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×