search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் பள்ளி- கல்லூரி வாகனங்களை அதிகாரிகள்  ஆய்வு
    X

    அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்ட காட்சி.

    உடுமலையில் பள்ளி- கல்லூரி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

    • மொத்தம் 266 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
    • வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா கதவுகள் சரியாக இயங்குகிறதா குறித்து ஆய்வு செய்தனர்.

    உடுமலை :

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் ,உடுமலை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா, பள்ளி கல்வி அதிகாரி ஆனந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, கண்காணிப்பாளர்கள் அருணாச்சலம், தங்கராஜ், தீயணைப்பு அலுவலர் கோபால், போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடுமலையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    கூட்டு ஆய்வுக்கு வந்திருந்த வாகனங்கள் 156. சரியாக உள்ள வாகனங்கள் 124, குறைபாடு உள்ள வாகனங்கள், தகுதி சான்று நீக்கம் செய்யப்பட்டவை 32 ,பணிமனையில் வேலைக்காக பணி மேற்கொண்டு வரும் வாகனங்கள் 110 எனமொத்தம் 266 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா கதவுகள் சரியாக இயங்குகிறதா , உறுதியாக உள்ளதா ,தீயணைப்பு கருவிகள் ,முதலுதவி வசதி , அவசரகால கதவுகள் குறித்து ஆய்வு செய்தனர். வாகன ஓட்டுனர்களின் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அவர்களின் உடல் தகுதி திறனும் ஆய்வு செய்யப்பட்டது. அவசரகால மீட்புப் பணி குறித்து ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர்.

    Next Story
    ×