search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் சிக்கண்ணா அரசு  கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு கண்காட்சி
    X

    கோப்புபடம்

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு கண்காட்சி

    • நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.
    • பல பொதுவான சுகாதாரப் பிரச்னைகளை ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்க முடியும் என்றாா்.

    திருப்பூர்:

    தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் ஆகியவை சாா்பில் 'உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள் - ஊட்டச்சத்தை வாங்குங்கள்' என்ற மைய கருத்தை வழியுறுத்தி கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

    கண்காட்சியைத் தொடங்கிவைத்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் பேசியதாவது: ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதில் அதன் பங்கு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக செப்டம்பா் முதல்வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருட்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற ஓா் உணவாகும். ஊட்டச்சத்து வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம், கொழுப்பு என பல ஊட்டக்கூறுகள் இதில் இடம்பெற்றிருக்கும். பல பொதுவான சுகாதாரப் பிரச்னைகளை ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்க முடியும் என்றாா்.

    இதைத் தொடா்ந்து, ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் படங்களை வரைந்து மாணவா்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்ததுடன், இயற்கையான காய்கறிகள், கீரைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.இந்நிகழ்ச்சியில், மேற்பாா்வையாளா் காந்திமதி, அங்கன்வாடி பணியாளா் ஹேமலதா, கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×