search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முதன்மைத்தேர்வு- திருப்பூரில் 26-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புப்படம்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முதன்மைத்தேர்வு- திருப்பூரில் 26-ந் தேதி நடக்கிறது

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முதன்மைத்தேர்வு- திருப்பூரில் 26-ந் தேதி நடக்கிறது.
    • தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாக தேர்வுக்கு அறிக்கை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையில் நிலைய அலுவலர் பணிக்கான முதன்மை தேர்வு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் காந்திநகர் அங்கேரிப்பாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குமார் நகர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

    தமிழ்மொழித்தேர்வு மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாக தேர்வுக்கு அறிக்கை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×