search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சங்க அலுவலகம் திறப்பு
    X

    கோப்புபடம்.

    பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சங்க அலுவலகம் திறப்பு

    • உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
    • வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த மே மாதம் திறப்பு விழா செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் சார்பு நீதிமன்றத்தையும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்,குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி திறந்து வைத்தார். இதில் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல், வழக்கறிஞர்கள் வெங்கடாசலபதி, ஈஸ்வரமூர்த்தி, மகேஸ்வரன், ராஜேஷ், மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×