search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய நிலக்கடலை ரகம் அறிமுகம்
    X

    கோப்புபடம். 

    புதிய நிலக்கடலை ரகம் அறிமுகம்

    • தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • மானாவாரியில் 12 நாட்கள், இறவையில் 122 நாட்களுக்கு ஏற்றது.

    உடுமலை:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கதிரி லெபாக் ஷி 1812 என்ற புதிய நிலக்கடலை ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம் வாயிலாக, இந்த புதிய ரகம் விவசாயிகளுக்கு கிடைக்கவும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட கிராமங்களில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் காட்டுப்பாளையம் கிராமத்தில் நடந்த பயிற்சி வகுப்பில், திட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:-

    மானாவாரி சாகுபடியை அதிகப்படுத்தவும், நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெறவும், வேளாண் துறை சார்பில் புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வறட்சியை தாங்கி வளரும்.மானாவாரியில் 12 நாட்கள், இறவையில் 122 நாட்களுக்கு ஏற்றது. அதிக மகசூல் தரக்கூடியது. எக்டருக்கு 5,000 கிலோ வரை மக்குல் கிடைக்கும்.இதில் 51 சதவீதம் எண்ணெய் சத்து மற்றும் 28 சதவீதம் புரதச்சத்து உள்ளது. பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத திறன் கொண்டதால் பயிர் பாதுகாப்பு, மருந்து செலவு குறையும்.இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×