search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழை, சபரிமலை சீசன் காரணமாக பல்லடத்தில் கறிக்கோழி விலை   கடும் வீழ்ச்சி
    X

    கோப்புபடம். 

    தொடர் மழை, சபரிமலை சீசன் காரணமாக பல்லடத்தில் கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதாலும், சபரிமலை சீசன் காரணமாக கறிக்கோழி நுகர்வு குறைவினாலும் கறிக்கோழி கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன் கறிக்கோழி கொள்முதல் விலை 100 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 72 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல், ரூ.90 வரை செலவாகும் நிலையில், இந்த விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×