பாரதிபுரம் பள்ளிக்கு சேர்கள் வழங்கும் நிகழ்ச்சி

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பரமசிவம்,பள்ளியின் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்ரமணியன் கலந்துகொண்டு பள்ளிக்கு சேர்கள் வழங்கிய சின்ராஜ்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.திருப்பூர் இடுவாய் ஊராட்சி பாரதிபுரம்- திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் தனது சொந்த செலவில் பாரதிபுரம் பள்ளிக்கு 25 சேர்களை வழங்கினார்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

மங்கலம்:

திருப்பூர் இடுவாய் ஊராட்சி பாரதிபுரம்- திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் தனது சொந்த செலவில் பாரதிபுரம் பள்ளிக்கு 25 சேர்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன், மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பரமசிவம்,பள்ளியின் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்ரமணியன் கலந்துகொண்டு பள்ளிக்கு சேர்கள் வழங்கிய சின்ராஜ்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் வி.ஐ.பி.நகர் சுரேஷ், இடுவாய் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் மௌனசாமி,முத்துவேல், ரவி, குமார், பிரபாகரன் , பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com