search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை:  இந்து முன்னேற்ற கழகம் வரவேற்பு
    X

    கோப்புபடம். 

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை: இந்து முன்னேற்ற கழகம் வரவேற்பு

    • இந்த அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுக–ளுக்கு தடை செய்துள்ளது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது.

    திருப்பூர்:

    இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு சட்ட விரோதமான பண பரிவர்த்தனை செய்ததாலும், பயங்கரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டியதாகவும்கூறப்படுகிறது. இதனால் இந்த அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளது.

    இந்த அமைப்பை ஏற்கனவே தடை செய்ய வேண்டும் என்று 2018-ம் ஆண்டு எனது சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அரசாங்கம் தான் இதுபோன்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தது. எனவே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×