search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில்  மின் உற்பத்திக்காக சோலார் பேனல்கள் அமைப்பு
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் மின் உற்பத்திக்காக சோலார் பேனல்கள் அமைப்பு

    • தற்போது தற்காலிகமாக பஸ்கள் நின்று திரும்புவதால் இப்பணி சற்று தாமதமாகி வருகிறது.
    • மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி செய்ய தகடுகள் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் காமராஜ் ரோட்டில் உள்ளது. இதில் ஏறத்தாழ ரூ.40 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.பஸ் நிலையத்தில் 45 பஸ்கள் நிற்கும் வசதி, தரை தளத்தில் 84 கடைகள், முதல் தளத்தில் 3உணவு விடுதிகள் அமைந்துள்ளன. இதுதவிர நிர்வாக அலுவலகம், போக்குவரத்து கழக நேரக்காப்பாளர் அலுவலகங்களும் உள்ளன. 4 பகுதிகளில் பொதுக்கழிப்பிடம், எலக்ட்ரிக் வாகனம் சார்ஜிங் ஸ்டேஷன், கண்காணிப்பு கேமரா, பஸ் புறப்பாடு அறிவிப்பு வசதி, பயணிகள் இருக்கை வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளன.கடைகளுக்கான ஏலம் முடிந்துள்ளன. வளாகம் முழுவதும் கட்டுமான பணி முற்றிலும் நிறைவடைந்து பெயின்டிங் மற்றும் நகாசு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

    பஸ்கள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதியில் இரு பெரிய அளவிலான ஆர்ச் அமைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. ஆர்ச் அமையும் இடத்தில் தற்போது தற்காலிகமாக பஸ்கள் நின்று திரும்புவதால் இப்பணி சற்று தாமதமாகி வருகிறது.

    பஸ் நிைலய பிரதான கட்டடத்தின் மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி செய்ய தகடுகள் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் 50 கே.வி., மின்சாரம் பெறப்படும். அதனை மின் வாரியத்துக்கு நேரடியாக வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.வாரியத்துக்கு வழங்கும் மின் அளவுக்கு ஏற்ப மாநகராட்சிக்கு மின் கட்டணத்தில் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.கட்டுமான பணிகள் அதிகபட்சமாக இன்னும் ஒரு மாத காலத்துக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால் விரைவில் பணிகள் முடிந்து இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×