search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமுருகன்பூண்டி கோவிலில் தேர்த்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
    X
    கோப்புபடம். 

    திருமுருகன்பூண்டி கோவிலில் தேர்த்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

    • 10ம் தேதி பிரம்ம தாண்ட தரிசன காட்சி, 11-ந் தேதி மஞ்சள் நீர் விழா உள்ளிட்டவை நடக்கின்றன.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    அவினாசி:

    திருப்பூர் திருமுருகன் பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா வருகிற 27-ந்தேதி முதல், தொடங்கி, அடுத்த மாதம் 11ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி வருகிற 27ந் தேதி இரவு கிராம சாந்தி, 28-ந்தேதி காலை கொடியேற்றம், மார்ச் 1ந் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகள், 2ந் தேதி பூத வாகனம், சிம்ம வாகன காட்சிகள், 3ம் தேதி புஷ்ப வாகன காட்சி, 4ம் தேதி பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சி, 5ம் தேதி திருக்கல்யாணம் யானை வாகன, அன்ன வாகன, காட்சிகள் உள்ளிட்டவை நடக்கின்றன.

    6 மற்றும் 7ந் தேதி மாலை 3 மணிக்கு, திருமுருகநாதர் தேர் வடம் பிடித்தல், 8ந் தேதி பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சிகள், மாலை தெப்பத்திருவிழா, 9ந் தேதி ஸ்ரீ சுந்தரர் வேடுபறி திருவிழா, 10ம் தேதி பிரம்ம தாண்ட தரிசன காட்சி, 11-ந் தேதி மஞ்சள் நீர் விழா உள்ளிட்டவை நடக்கின்றன.

    தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் சுத்தம் செய்தல், கொடிமரத்தில் பொருத்தப்பட்டுள்ள பித்தளை தகடுகளை கழற்றி பாலிஷ் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×