search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே கரையான்புதூரில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
    X

    பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து தர வலியுறுத்தி மனு அளித்த காட்சி. 

    பல்லடம் அருகே கரையான்புதூரில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

    • பொதுமக்கள் வீடுகள் முன்பு தொட்டி போல கழிவு நீரை விட்டு வருகின்றனர்.
    • நகராட்சி தலைவர் இல்லாததால் மனு அளிக்குமாறு அங்கிருந்த நகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 6- வது வார்டுக்கு உட்பட்ட கரையான்புதூர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், பொதுமக்கள் வீடுகள் முன்பு தொட்டி போல கழிவு நீரை விட்டு வருகின்றனர்.

    இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே கழிவு நீர் கால்வாய் அமைத்து தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நகராட்சி அலுவலகத்தில் இதுகுறித்து புகார் தெரிவிக்க சுமார் 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

    அவர்களுடன் நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தியும் வந்தார். இந்த நிலையில் நகராட்சி தலைவர் இல்லாததால் மனு அளிக்குமாறு அங்கிருந்த நகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    Next Story
    ×