என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மழைநீர் தேங்குவதை தடுக்க சுகாதார துறை அறிவுறுத்தல்
- மாநகரிலும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழைப்பொழிந்து வருகிறது.
- டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக மழை பொழிவு இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழையளவு பதிவாகி வருகிறது. மாநகரிலும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழைப்பொழிந்து வருகிறது.இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மழைநீர் தேங்காத வகையில் பொதுமக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக வீட்டில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தொட்டிகள், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை மூடி போட்டு பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார துறை ஊழியர்கள் தொடர்ந்துகொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் குடியிருப்புகள், நிறுவனங்களில் ஆய்வு செய்து அங்கு நீர் தேங்க வழிவகை செய்யும் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், கொசு மருந்து தெளித்தல், புகையடித்தல் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.வீடுகளில் கொசு உற்பத்தியாவதை தடுக்க அதற்கான வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். கொசு உற்பத்தியாக வழிவகை செய்யும் வீடு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்