search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அருகே தெரு நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி
    X

    கோப்புபடம்

    திருப்பூர் அருகே தெரு நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

    • ஆடுகளை முத்தண்ணம் பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டு சென்றுள்ளனர்.
    • தெரு நாய்கள் தொல்லையால் வேலை முடிந்து இரவு நேரங்களில் அவ்வழியாக வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கேயம் ரோடு, நல்லிக்கவுண்டர் நகர், ஒரு வங்கி அருகே வசித்து வருபவர் மணி மற்றும் ஈஸ்வரன். இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இரவு, பகலில் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் புகுந்த தெரு நாய்கள் 5 க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறியுள்ளது. அதில் 3 ஆடுகள் உயிரிழந்துள்ளது.

    2 ஆடுகளை முத்தண்ணம் பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்கதையாக உள்ளது. தெரு நாய்கள் தொல்லையால் வேலை முடிந்து இரவு நேரங்களில் அவ்வழியாக வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×