என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான பாலசுப்பிரமணி.
பல்லடம் அருகே சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலி
- பாலசுப்பிரமணி பேத்திகள் 2 பேரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
- விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகன் பாலசுப்பிரமணி(வயது 53). இவர் பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் கலாசு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பல்லடம் பனப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்துள்ளார். பிறகு மாலை சுமார் 6 மணி அளவில், புளியம்பட்டி செல்வதற்காக அவரது பேத்திகள் 2 பேரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, பாரதி ஸ்கூல் அருகே எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பாலசுப்பிரமணியன் மயங்கி கிடந்தார். சிறுமிகளுக்கு கை, கால்களில், காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த வழியே சென்றவர்கள் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பாலசுப்பிரமணியனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சிறுமிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பாலசுப்பிரமணியன் மகன் கார்த்தி கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தவர் விபத்தில் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






