search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே புதிய சாய தொழிற்சாலை அமைக்கும் விவகாரத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை
    X

    பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.

    பல்லடம் அருகே புதிய சாய தொழிற்சாலை அமைக்கும் விவகாரத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

    • சாயத் தொழிற்சாலை தரப்பினர் கட்டுமான பணிகளை நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர்.
    • பொதுமக்களும் கருப்புக் கொடி போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையத்தில், சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே அங்கு பல சாயத்தொழிற்சாலைகள் உள்ளது. இந்த நிலையில், புதிதாக சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஏற்கனவே, முதல்வர்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    ஆனாலும் சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில், இது குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சாயத் தொழிற்சாலை உரிமையாளர்கள், குன்னாங்கல்பாளையம் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இரு தரப்பினரின் கருத்தை கேட்ட தாசில்தார் இது குறித்து அடுத்த பேச்சுவார்த்தை நடைபெறும் வரை சாயத்தொழிற்சாலை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்கும்படியும், பொதுமக்கள் தங்களது போராட்டங்களை நிறுத்தி வைக்கும்படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து சாயத் தொழிற்சாலை தரப்பினர் கட்டுமான பணிகளை நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர். பொதுமக்களும் கருப்புக் கொடி போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து விரைவில் அறிவிப்பதாக தாசில்தார் தெரிவித்தார்.

    Next Story
    ×