என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
வெள்ளகோவிலில் காணாமல் போன அறிவிப்பு பலகை
- நெடுஞ்சாலைத்துறை சார்பில் மெதுவாக செல்லவும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
- புதிதாக அந்த ரோட்டில் வருபவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் இருந்து உப்புபாளையம் வழியாக வள்ளியரச்சல் செல்லும் ரோட்டில் ஒரு வளைவில் நெடுஞ்சாலை த்துறை சார்பில் அபாயகரமான வளைவு மெதுவாக செல்லவும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. தற்போது அறிவிப்பு பலகை இல்லாமல் அதற்காக அமைக்கப்பட்ட கம்பம் மட்டும் உள்ளது, பலகை காற்றில் பறந்து விட்டதா இல்லை யாராவது எடுத்துச்சென்று விட்டார்களா தெரியவி ல்லை, பல மாதங்கள் ஆகியும் அறிவிப்பு பலகை வைக்காமல் இருப்பதால் புதிதாக அந்த ரோட்டில் வருபவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story






