1,330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்த காங்கயம் அரசு பள்ளி மாணவிக்கு அமைச்சர் பாராட்டு

காங்கயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வருபவா் மாணவி சபா்நிகா ஸ்ரீ..மெ.சபா்நிகா ஸ்ரீயை பாராட்டி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.
1,330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்த காங்கயம் அரசு பள்ளி மாணவிக்கு அமைச்சர் பாராட்டு
Published on

காங்கயம்,:

காங்கயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வருபவா் மாணவி சபா்நிகா ஸ்ரீ.

இவா் திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் கடந்த 2022 -ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் கலந்துகொண்டு 1,330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்தார்.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், செங்கப்பள்ளி பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி மெ.சபா்நிகா ஸ்ரீயை பாராட்டி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.

மாணவிக்கு காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாரதியாா் நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com