என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்குளியில் லாட்டரி விற்றவர் கைது
- லாட்டரி சீட்டு திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கேரளா லாட்டரி திருட்டுத்தனமாக விற்பனை செய்த பாரப்பாளையம் மண்ணரையை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி அருகே உள்ள கூலிபாளையம் நான்கு ரோட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா காருண்யா மூன்று இலக்க லாட்டரி சீட்டு திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட ஊத்துக்குளி போலீசார், கேரளா லாட்டரி திருட்டுத்தனமாக விற்பனை செய்த பாரப்பாளையம் மண்ணரையை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story