search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை- மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
    X

    யானைகள் சாலை கடக்கும் காட்சி.

    உடுமலை- மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

    • அமராவதி அணையில் நீர் இருப்பு உள்ளதால் அணைப்பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன.
    • யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்பவோ அவற்றின் மீது கற்களை வீசுவது, செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது.

    உடுமலை:

    உடுமலை அமராவதி அணையில் நீர் இருப்பு உள்ளதால் அணைப்பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு ,தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தியடைந்துள்ளது. மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை -மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்கு செல்வதும் மாலையில் அணை பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

    எனவே யானைகள் சாலையை கடக்கும் வரையில் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து சாலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்பவோ அவற்றின் மீது கற்களை வீசுவது, செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×