என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலை பகுதியில் தொடர் மழையால் திருமூர்த்தி மலையில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
- கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை வழிபாடு செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
உடுமலை, நவ.15-
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் வழியாக நீர்வரத்தை வழங்கி வருகிறது.
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து காணப்பட்டது.இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மாலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் திடீரென பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அருவியில் தண்ணீரின் சீற்றம் குறைந்ததால் கடந்த 11-ந்தேதி முதல் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை விடுமுறை தினத்தை ஜாலியாக பொழுதை கொண்டாட திருமூர்த்தி மலைக்கு சுற்றுலா வந்த பயணிகள் உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. இதனால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ள பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு, ஆர்ப்பரித்தவாறு, மலையின் அடிவார பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சுற்றிலும் தழுவியவாறு திருமூர்த்தி அணையை வந்தடைந்தது.
அதைத் தொடர்ந்து கோவில் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு வழக்கம் போல் பூஜை நடைபெற்றது. நேற்று காலை அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் ஆவலோடு திருமூர்த்தி மலைக்கு வந்தனர். ஆனால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதைத் தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை வழிபாடு செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு நீரில் இருந்து பாதுகாக்க கோவில் உண்டியல்களை பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டப்பட்டது. மேலும் அருவிக்கு வந்துள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதே போன்று உடுமலை, தளி, அமராவதி பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் சீற்றம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்