search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடத்துக்குளம் வட்டாரத்தில் பலத்த மழை - வாழை-தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன
    X

    கோப்புபடம்

    மடத்துக்குளம் வட்டாரத்தில் பலத்த மழை - வாழை-தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன

    • பாப்பான்குளம் பிரிவு பகுதியில் செயல்பட்டு வந்த கோழிப்பண்ணை காற்றின் வேகத்தால் பலத்த சேதமடைந்தது.
    • சாமராயப்பட்டி பகுதியில் பழனி ரோட்டில் சாலையோர மரங்கள் பல சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடுமலை:

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. ஆனால் மாலையில் திடீரென பருவநிலையில் மாறுதல் ஏற்பட்டு வானம் மேகமூட்ட த்துடன் காணப்பட்டது.மேலும் திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த சூறாவளிக் காற்றால் சாமரா யப்பட்டி, பாப்பான்குளம், சாளர ப்பட்டி, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. பாப்பான்குளம் பிரிவு பகுதியில் செயல்பட்டு வந்த கோழிப்பண்ணை காற்றின் வேகத்தால் பலத்த சேதமடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கோழிக்கு ஞ்சுகள் உயிரிழந்தன. மேலும் சாமராயப்பட்டியைச் சேர்ந்த விவசாயி நந்தகோபால் என்பவரின் தோட்டத்தில் 18 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன.

    மேலும் சுரேஷ் என்ற விவசாயி தோட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் ஒரு தென்னை மரம் சேதமானது. சாளரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியின் தோட்டத்தில் 2 ஏக்கர் வாழைமரங்கள் சேதம டைந்துள்ளது. இதுபோல பல விவசாயி களின் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சேதமடைந்தது.மேலும் ஆலங்கட்டி மழையால் தக்காளி,மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிப் பயிர்க ளும் சேதமடைந்து ள்ளன.எனவே வேளாண்மைத்துறை யினர் மற்றும் வருவாய்த்து றையினர் முழுமையாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாமராயப்பட்டி பகுதியில் பழனி ரோட்டில் சாலையோர மரங்கள் பல சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவ ரத்து சீரமைக்க ப்பட்டது.அத்துடன்ரெட்டி பாளையம், பாப்பான்குளம், சாமராயப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் காற்றின் வேகத்தால் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது.இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது. சுமார் 20 நிமிடங்கள் காற்று ஆடிய ருத்ர தாண்டவத்தால் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    அக்னி வெயில் கொளுத்தும் காலத்தில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்த சம்பவம் மடத்துக்குளம் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.அதேநேரத்தில் மரங்கள் சாய்ந்து, மின் கம்பங்கள் விழுந்து பல வகைகளில் சேதம் ஏற்பட்ட போதும் உயிரிழப்பு ஏற்படாதது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.பல கிராமங்கள் இருளில் மூழ்கியு ள்ளதால் முழுமையான சேதம் குறித்த விபரங்கள் இன்று அதிகாரிகளின் ஆய்வின் மூலமாகவே தெரிய வரும்.

    Next Story
    ×