என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் நாய் கடித்து ஆடு பலி
    X

    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் நாய் கடித்து ஆடு பலி

    • நாய் கடித்ததில் ஒரு ஆடு இறந்து விட்டது. மற்ற ஒரு ஆட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
    • ஆடுகள், கோழிகளை நாய்கள் கடிப்பது வாடிக்கையாகவே உள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில், உப்புபாளையம் ரோட்டில் முத்தாட்சி (வயது 70) என்பவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை அவர் ஆட்டுபட்டியில் வளர்த்து வரும் ஆடுகளை நாலைந்து நாய்கள் சேர்ந்து கடித்துக் கொண்டிருந்தது. இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் உடனே சென்று நாய்களை விரட்டியடித்தனர்.

    இதில் நாய் கடித்ததில் ஒரு ஆடு இறந்து விட்டது. மற்ற ஒரு ஆட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்; வெள்ளக்கோயில் பகுதியில் மான்கள், ஆடுகள், கோழிகளை நாய்கள் கடிப்பது வாடிக்கையாகவே உள்ளது, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×