search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணியில் கலந்து கொண்டவர்களின் காட்சி.

    காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • விழிப்புணர்வு பேரணியை சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • மாநகரின் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 250 பேரும், ஆசிரியர்கள் 25 பேரும் பள்ளியில் செயல்பட்டு வரும் இன்ட்ராக்ட் சங்க மாணவர்களுடன் இணைந்து சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளின் முக்கியத்துவம் குறித்தும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் திருப்பூர் மாநகரின் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

    காந்திநகர் டாலர் பிளாசா அமைந்துள்ள பகுதியில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கியப்பகுதிகளின் வழியாக சென்று அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நிறைவுற்றது.

    முன்னதாக இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தினை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    பள்ளி முதல்வர் பிரமோதினி, பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, நித்யா மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகத்தின் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சுகுமார், ரோட்டரி மற்றும் இன்டராக்ட் அமைப்பு அலெக்ஸ் பால், ரோட்டரிஅமைப்பின் முதன்மை நபர் ராஜலட்சுமி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

    Next Story
    ×